தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.!

Apr 6, 2025 - 17:35
 0
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.!

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.!

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் அக்கல்லுரியில் வைத்து நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜெஸி இந்த வேலைவாய்ப்பின் முக்கியத்துவம் மற்றும் அதற்கான வழிமுறைகளை பற்றி எடுத்துரைத்தார். கல்லூரியின் செயலர் சி.சிபானா அனைவரையும் வாழ்த்திப் பேசினார். வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டுதல் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவிப்பேராசிரியர் சோனல் கல்லூரியில் நடைபெற்று வரும் மாணவிகளுக்கான போட்டித்தேர்வுகள் மற்றும் பிற பயிற்சி வகுப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

இதில் 22 கல்லூரி நிறுவனங்கள் பங்கேற்று மாணவிகளுக்கு வேலை வாய்ப்பிற்கான பல்வேறு கட்ட தேர்வுகளை நடத்தினர். இறுதியாண்டு பயிலும் மாணவிகள் அனைவரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow