திருச்செந்தூர் கடற்கரையில் கிடைத்த 4வது கல்வெட்டு.. முருகப் பெருமானின் முக்கிய வரலாற்றை கூறுகிறது..!

திருச்செந்தூர் கடற்கரையில் கிடைத்த 4வது கல்வெட்டு. முருகப் பெருமானின் முக்கிய வரலாற்றை கூறியதால் பக்தர்கள் மகிழ்ச்சி.!
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இக்கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தரும் நிலையில், கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக திருச்செந்தூரில் கடலின் சீற்றம் அதிகமாக இருந்து வருவதால் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் சுமார் 6 அடி உயரம் கொண்ட கல்வெட்டு ஒன்று கரையில் தென்பட்டது. ஆனால் அந்த கல்வெட்டு கவிழ்ந்த நிலையில் கிடந்தது. இதை சரி செய்து கல்வெட்டை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கோவில் பணியாளர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் இணைந்து கடற்கரையில் கிடந்த கல்வெட்டை மீட்க முயற்சித்தனர்.
இதற்காக கீழே உள்ள கான்கிரிட்டை அகற்ற சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி வந்தனர். ஆனால் கல்வெட்டு அதிக எடையுடன் இருந்ததால் நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பிறகு நீண்ட நேரம் போராடிய நிலையில் திருச்செந்தூர் கடற்கரையில் கடலை நோக்கி நின்றபடி தியானம் மேற்கொண்ட ஒருவர் திடீரென கல்வெட்டை மீட்க கூட்டத்துக்குள் வந்தார். ஒரு கம்பில் கயிறை கட்டி தூக்குங்கள் கல்வெட்டை தூக்கி விடலாம் என்று ஐடியா சொல்ல நீண்ட நேரமாகியும் திருப்பி போட முடியாமல் இருந்த கல்வெட்டு அதிசயமாக திரும்பி விழுந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
மீண்டும் அந்த பக்தர் கோயிலின் கிழக்கு நோக்கி நின்று அடுத்த சில நிமிடங்களில் பக்தர்களோடு பக்தராக காணாமல் போனார். அதன் பிறகு அங்கிருந்த கோவில் பணியாளர்களும் கடற்கரை பணியாளர்களும் கல்வெட்டில் திருநீறு தேய்த்து எழுத்துக்களை படித்தனர்.
அந்த கல்வெட்டில் சத்திய தீர்த்தம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், 'இதன் பலன் துன்பம் முழுவதையும் நீக்கி நீக்குதற்குரிய ஊழ்வினையை அறவே தொலைத்து வேத சாஸ்திராதி கல்விகளையும் தந்து சண்முகக் கடவுளுடைய பாதாரவிந்த அருட் செல்வத்தையும் கொடுக்கும்' என்று கூறப்பிட்டிருந்தது.
ஏற்கனவே திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்குள் 3 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் மாதா தீர்த்தம், பிதா தீர்த்தம், முனி தீர்த்தம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட மூன்று கல்வெட்டுகளிலும் சண்முகர் என்று முருகனை குறிப்பிடவில்லை. இந்த கல்வெட்டில் தான் முருகனை குறிப்பிட்டு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கல்வெட்டு சத்திய தீர்த்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முருகனை வணங்குபவர்களுக்கு நிச்சயம் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது அசைக்க முடியாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது இந்த கல்வெட்டு.
What's Your Reaction?






