தூத்துக்குடி மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம்..!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்..!
தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 270 விசைப்படகுகள் மூலம் கடலில் மீன் பிடி தொழில் செய்து வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, தூத்துக்குடி எல்லைக்குள் கேரள விசைப்படகு மீனவர்கள் இரவு, பகல் மீன் பிடித்து வருகின்றனர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, ஆகவே, உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தின் 270 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 17,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுள்ளனர்.
What's Your Reaction?






