Thupparithal
செய்திகள்

பெண்ணின் மனதை திருடிய வாலிபர் கைது: தூத்துக்குடி அருகே வைரலாகும் திருமண வாழ்த்து பேனர்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரம் கிராமத்தை சேர்ந்த பகீரதன் – ரோஸிட்டா தம்பதியினரின் திருமண விழாவை முன்னிட்டு, அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சார்பில் திருமண விழாவிற்கு வைத்த பேனர் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த பேனரில் செய்தி நாளிதழில் வரும் செய்தி தலைப்புகள் போல “சுப்பராயபுரத்தில் பரபரப்பு – வாலிபர் கைது” என்ற தலைப்பில் வினோதமான முறையில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பேனரில் “பெண்ணின் மனதை திருடியது குற்றம்” எனவும் அந்தக் குற்றத்திற்கு முக்கிய சாட்சிகளாக 10 பேர் சேர்க்கப்பட்டு, அவர்களது புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குற்றத்தை கண்டுபிடிக்க துப்பு கொடுத்தது மணமகன் குடும்பத்தினர் எனவும், இந்த குற்றத்திற்கு தண்டனையாக மூன்று முடிச்சு போடுவதை தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பேனரை கடந்து செல்பவர்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

Related posts

தூத்துக்குடி கோவில் அறங்காவலர்கள் நியமன ஆணையை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.

Admin

தூத்துக்குடியில், எதிர்பாராத விதமாக சரிந்த விசைப்படகு; படகின் அருகில் இருந்த இருவருக்கு பலத்த காயம்; தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதி!.

Admin

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் 91 வது பிறந்த நாள்; புரட்சித் திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை!

Admin

Leave a Comment

error: Content is protected !!