Thupparithal
அரசியல்

வியாபாரிகள் மத்தியில் திமுகவிற்கு நல்ல வரவேற்பு…. தூத்துக்குடியில் கனிமொழி-யை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து புதிய சகாப்தம் படைக்க பாடுபடுவோம்… மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மேயர் ஜெகன் பேச்சு..!

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார்.. இவரை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என மேயர் ஜெகன் தினமும், காலையும், மாலையும் வீதி, வீதியாக சென்று மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார்.. இதே போன்று மாமன்ற உறுப்பினர்களும் அவரவர் பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்குகள் கேட்டு வருகின்றனர்…

இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றி தந்த திட்டங்கள் மற்றும் தூத்துக்குடியில் ஆற்றிய களப்பணிகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்குகளை பெற ஏதுவாக மேயர் ஜெகன் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டமானது, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கீதா ஹோட்டலில் வைத்து நடைபெற்றது.. கூட்டத்தில், மேயர் ஜெகன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அவரவர்கள் கருத்தை எடுத்து கூறினர்…

பின்னர், இறுதியாக மேயர் ஜெகன் பேசுகையில், தூத்துக்குடி மக்கள் பாசக்காரர்கள், 2 வருடங்களில் பல்வேறு பணிகளை மக்களுக்கு செய்துள்ளோம்.. சாலை வசதி, மின்விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுத்துள்ளோம்.. மேலும், பொது மக்களின் வசதிக்காக 5 ம் ரயில்வே கேட் வரவுள்ளது. இதனால் மக்கள் போக்குவரத்து இடைஞ்சல் இல்லாமல் எளிதாக சென்று வர முடியும்… இதே போன்று தூத்துக்குடி-யில் பல அடிப்படை வசதிகள் செய்து கொடுத்துள்ளோம்… ஆகவே மாமன்ற உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் இத்திட்டங்களை முன் வைத்து வாக்குகள் கேட்க வேண்டும்.

வியாபாரிகள் மத்தியில் திமுகவிற்கு நல்ல வரவேற்பு உள்ளது.. ஆகவே, தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து புதிய சகாப்தம் படைக்க நாம் பாடு பட வேண்டும் என்றார்..

Related posts

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 17ஆம் ஆண்டு துவக்க விழா; முன்னிட்டு கோவில்பட்டியில் சமத்துவ மக்கள் கட்சி கொடி ஏற்றி வைத்து மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கினர்.

Admin

அதிமுக கழக கொடியை ஏற்றி, இனிப்பு வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ..!

Admin

தூத்துக்குடி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சருக்கும், தூத்துக்குடி அதிமுக வேட்பாளருக்கும் இடையே பரபரப்பு..! இந்தா மைக்கை பிடி என வேட்பாளரிடம் மைக்கை கொடுத்துவிட்டு அமர்ந்த முன்னாள் அமைச்சர்; என்ன நடந்தது…!

Admin

Leave a Comment

error: Content is protected !!