Thupparithal
செய்திகள்

தூத்துக்குடியில், எதிர்பாராத விதமாக சரிந்த விசைப்படகு; படகின் அருகில் இருந்த இருவருக்கு பலத்த காயம்; தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதி!.

தூத்துக்குடி, புன்னகாயல் பகுதியை சேர்ந்தவர் அண்டோ இவருக்கு பணிமய மாதா கோவில் எதிரே உள்ள விசுவாச போர்ட் யார்டு என்ற தோணி கட்டும் பகுதியில் புதியதாக
விசைப்படகு கட்டும் பணியானது நடைபெற்று வந்துள்ளது. பின்னர் படகு கட்டும் பணியானது கடந்த வாரம் முடிவற்ற நிலையில், இன்று பிற்பகல் வெள்ளோட்டத்திக்காக கடலுக்கு இழுத்து செல்ல தொழிலாளர்கள் முற்பட்டுள்ளனர்..

இந்நிலையில், அப்படகானது, எதிர்பாராத விதமாக வடபுரம் சரிந்துள்ளது. இதனால் படகின் அருகில் இருந்த உரிமையாளர் அண்டோ மற்றும் அருகில் நின்ற அகிலன் ஆகியோருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.. பின்னர், உடனடியாக அருகில் இருந்தவர்கள் தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் இருவரையும் சிகிசைக்காக சேர்ந்தனர்…

பின்னர், ராட்ஷச கிரேன் மூலம் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் படகை சம நிலைக்கு கொண்டு வந்தனர்..இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி சத்யராஜ் விசாரணை மேற்கொண்டு வருகிறார்..

திடீரென கவிழ்ந்த படகால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

Related posts

தூத்துக்குடியில், வரும் 13-ந் தேதி மாநில அளவிலான சதுரங்க போட்டி தனியார் கல்லுரியில் நடைபெற இருக்கிறது.

Admin

தூத்துக்குடி மாநகரில் காமராஜர் சிலை அமைக்க அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

Admin

தசரா குடில் அமைப்பதற்கு மின்வாரியம் சார்பில் வைப்பு தொகை; தசரா குழுவினர் உபயோகித்த மின் கட்டணத்தை கழித்து மீத தொகையை குழுவினரிடம் ஒப்படைக்கவில்லை என்றால் தூத்துக்குடி மின் வாரிய தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை…!

Admin

Leave a Comment

error: Content is protected !!