Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் நவ.26, 27ல் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்; ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 26 மற்றும் 27ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம், ஆதார் எண் இணைத்திட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது; தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2023 பணியானது 09.11.2022 முதல் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வாக்காளர்களிடமிருந்து மனுக்கள் பெற்று வருகின்றனர். மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

நமது மாவட்டத்தில் இதுவரை 61 சதவிகிதம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைத்திடவும் மனுக்கள் பெற்றிட 26.11.2022 (சனிக்கிழமை) மற்றும் 27.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

மேற்படி, சிறப்புமுகாம் நாட்களில் காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணி முடிய மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் விண்ணப்பங்களை அளிக்கலாம். 01.01.2023 அன்று 18 வயது நிறைவடைந்தவர்கள் அதாவது 31.12.2004 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்தவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மனு அளிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயரினை சேர்க்க படிவம்-6, பெயரினை நீக்கம் செய்திட படிவம்-7, ஏற்கனவே உள்ள பதிவுகளில் திருத்தம் செய்திட, வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம் செய்திட மற்றும் வேறு சட்டமன்ற தொகுதியில் உள்ள பதிவினை தற்சமயம் வசிக்கும் முகவரிக்கு மாற்றம் செய்திடவும் படிவம்-8 அளித்திட வேண்டும். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைத்திட படிவம்-6டீ அளிக்கவேண்டும். மேலும் www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter helpline என்கிற மெபைல் செயலி மூலமாகவும் உரிய ஆவணங்களுடன் பொது மக்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திடலாம்.

வாக்காளர் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணியில் பெறப்படும் விண்ணப்பங்கள்; அனைத்தும் பரிசீலனை மற்றும் கள ஆய்வு செய்யப்பட்டு ஜனவரி, 2023 ம் மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி மற்றும் சிறப்பு முகாம் நாட்களில் பொதுமக்கள் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களையோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண். 1950 னை தொடர்பு கொண்டு தங்களது சந்தேகம், கோரிக்கை தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட தூத்துக்குடி-கோயம்புத்தூர் ரெயில் சேவையை மீண்டும் இயக்க வேண்டும்- காங்கிரஸ் மாவட்ட தலைவர் முரளிதரன் கடிதம்!.

Admin

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு!.

Admin

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் முத்துநகர் பல்லுயிர் பூங்கா திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

Admin

Leave a Comment

error: Content is protected !!