Thupparithal
செய்திகள்

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட தூத்துக்குடி-கோயம்புத்தூர் ரெயில் சேவையை மீண்டும் இயக்க வேண்டும்- காங்கிரஸ் மாவட்ட தலைவர் முரளிதரன் கடிதம்!.

மதுரை கோட்டம், மண்டல மேலாளருக்கு தூத்துக்குடி காங்கிரஸ் மாநகர தலைவர் முரளிதரன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது; தூத்துக்குடி-கோயம்புத்தூர் இணைப்பு இரயில் பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கொரோனா பரவல் கால கட்டத்தில் இந்த சேவை நிறுத்தப்பட்டது.

தற்போது கொரோனா பரவல் முற்றிலும் நீங்கிவிட்ட நிலையில், இந்த இரயில் சேவை தொடராமல் இருப்பதால் தூத்துக்குடி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

கல்லூரி மாணவ, மாணவியர்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட இந்த இரயில் சேவையை உடனே தொடங்கிட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

Related posts

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம்; சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் மயக்கத்தில் இருந்தும் விடாமல் கைது செய்த போலீசார்!.

Admin

நீச்சல் குறித்து விழிப்புணர்வு; நீச்சல் குளத்தில் மிதந்தவாறு 7 மணி நேரம் 30 நிமிடங்கள் மிதந்து குளோபல் உலக சாதனை படைத்து கலக்கிய சிறுவன்!.

Admin

கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் பிப். 24இல் கண்காட்சி: விவசாயிகளுக்கு ஆட்சியா் அழைப்பு

Admin

Leave a Comment

error: Content is protected !!