Thupparithal
செய்திகள்

கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் பிப். 24இல் கண்காட்சி: விவசாயிகளுக்கு ஆட்சியா் அழைப்பு

கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் உயா்தர உள்ளூா் ரகங்களை பிரபலப்படுத்துவதற்காக வெள்ளிக்கிழமை (பிப். 24) கண்காட்சி நடைபெறவுள்ளதாக, ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உயா்தர உள்ளூா் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில், இம்மாவட்ட விவசாயிகள் பங்கேற்று, உயா்தர ரகங்களை காட்சிப்படுத்தலாம். இதன்மூலம், வேளாண் கல்லூரி விஞ்ஞானிகள் வீரியமிக்க குணங்களைக் கொண்ட ரகங்களைக் கண்டறிந்து புதிய ரகங்களை உருவாக்க ஏதுவாக இருக்கும். பங்கேற்க விருப்பமுள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநா்கள் அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என்றாா் அவா்.

Related posts

தூத்துக்குடி மாநகரில் காமராஜர் சிலை அமைக்க அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

Admin

76வது சுதந்திர தின விழா; அஞ்சல் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை; முன்னாள் தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி பொது மக்களுக்கு இலவசமாக அளிப்பதற்கு தேசிய கொடி வாங்கினார்.

Admin

நெடுஞ்சாலைத்துறையின் அலட்சிய போக்கு – தாளமுத்துநகர் பிரதான சாலையை சீரமைக்க கோட்டப்பொறியாளருக்கு ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார் வேண்டுகோள்

Admin

Leave a Comment

error: Content is protected !!