Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி அருகே, கோயில் சுற்றுச்சுவர் எழுப்ப இடையூறு, சட்ட போராட்டம் செய்து வெற்றி பெற்ற பின்னரும், எதிர் தரப்பினரிடம் இருந்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் மாவட்ட நிர்வாகத்திடம் கோவில் நிர்வாகிகள் வேண்டுகோள்!.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், வேம்பார் கிராமத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் இந்து நாடார் உறவின்முறை பத்திரகாளியம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடம் சம்பந்தமாக இன்று (10.12.2022) அதன் நிர்வாக தலைவர் காசிராமன் தூத்துக்குடியில் பத்திரிகையாளரை சந்தித்தார்.

செய்தியாளர் சந்திப்பின் போது அவர் தெரிவித்ததாவது; கடந்த 34 வருடங்களாக நீதிமன்றங்களில் வழக்கை சந்தித்த வேம்பார் சுப்பிரமணியபுரம் இந்து நாடார் உறவின்முறை ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோவில் நிலங்கள் சுமார் 1 ஏக்கர் 9 செண்டு நிலங்களில் உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, அம்மன் கோயிலுக்கு சுற்று சுவர் எழுப்ப பட்டா ஆவணங்கள் வழங்கி பாதுகாப்பு வழங்க மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாங்கள் பாதுகாப்பு சம்பந்தமாக பலமுறை மாவட்ட அதிகாரிகளுககு மனு கொடுத்திருந்தோம். அவர்கள் எங்களுக்கு உரிய பாதுகாப்பு இதுவரை வழங்கவில்லை எனவே, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வரும் (13.12.2022) தேதி இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு சுற்று சுவர் பணி ஆரம்பிக்க இருக்கிறோம்.

எனவே தாமஸ் சிஎஸ்ஐ சர்ச் நிர்வாகத்தினர் கோவில் சுற்றுச் சுவர் கட்டுவதற்கு எங்களுக்கு எந்த இடையூறும் செய்யாத வகையில் அதற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தனர்.

செய்தியாளர் சந்திப்பின்போது கோயில் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Related posts

தூத்துக்குடி வஉசி சாலையில் உள்ள யூனியன் வங்கியை மற்றொரு கிளையுடன் இணைக்க முற்படுவதை கண்டித்து வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்..!

Admin

பணியில் இருந்த போது இறந்த தந்தை; கருணை அடிப்படையில் மகனுக்கு பணி ஆணையை வழங்கிய சண்முகையா எம்எல்ஏ!.

Admin

தூத்துக்குடி சிவன் கோவிலில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்; மேயர் ஜெகன் பெரியசாமி நடத்தி வைத்தார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!