மாப்பிள்ளையூரணி கூட்டுறவு நகர கடன் சங்கத்திற்கு உட்பட்ட நியாய விலைக் கடையில் பணிபுரிந்த சண்முகராஜ் பணியின் போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தில் ஒருவரான அவரது மகன் ராகவிஸ்வா கருணை அடிப்படையில் நியாய விலைக் கடையின் ஊழியராக பணியாற்ற பணி நியமன ஆணையை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா வழங்கினார்.
மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு நகர கடன் வங்கி தலைவருமான சரவணக்குமார், கவுன்சிலர்கள் சேவியர், அந்தோணிதனுஷ்பாலன், கூட்டுறவு சங்க துணை தலைவர் சிவகுமார், கூட்டுறவு சங்க செயலர் காமராஜ், செயலாளர் பாலமுருகன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மற்றும் மாரியப்பன், கிளைசெயலாளர் வேல்ராஜ், கௌதம் உட்பட பலர் உடனிருந்தனர்.