Thupparithal
செய்திகள்

பணியில் இருந்த போது இறந்த தந்தை; கருணை அடிப்படையில் மகனுக்கு பணி ஆணையை வழங்கிய சண்முகையா எம்எல்ஏ!.

மாப்பிள்ளையூரணி கூட்டுறவு நகர கடன் சங்கத்திற்கு உட்பட்ட நியாய விலைக் கடையில் பணிபுரிந்த சண்முகராஜ் பணியின் போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தில் ஒருவரான அவரது மகன் ராகவிஸ்வா கருணை அடிப்படையில் நியாய விலைக் கடையின் ஊழியராக பணியாற்ற பணி நியமன ஆணையை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா வழங்கினார்.

மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு நகர கடன் வங்கி தலைவருமான சரவணக்குமார், கவுன்சிலர்கள் சேவியர், அந்தோணிதனுஷ்பாலன், கூட்டுறவு சங்க துணை தலைவர் சிவகுமார், கூட்டுறவு சங்க செயலர் காமராஜ், செயலாளர் பாலமுருகன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மற்றும் மாரியப்பன், கிளைசெயலாளர் வேல்ராஜ், கௌதம் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related posts

போதைக்கு எதிரான விழிப்புணர்வு; கிரிக்கெட் போட்டி தூத்துக்குடி யுஎஸ்ஏ அணி சாம்பியன் பட்டம் வென்றது!.

Admin

ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு: ஆட்சியர் அழைப்பு!.

Admin

2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு; தூத்துக்குடியில் நடைபெற்று வரும் தேர்வு எழுதும் மையங்களுக்கு சென்னை ரயில்வே காவல்துறை துணைத் தலைவர் அபிஷேக் தீக்ஷித் நேரில் ஆய்வு.

Admin

Leave a Comment

error: Content is protected !!