Thupparithal
செய்திகள்

2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு; தூத்துக்குடியில் நடைபெற்று வரும் தேர்வு எழுதும் மையங்களுக்கு சென்னை ரயில்வே காவல்துறை துணைத் தலைவர் அபிஷேக் தீக்ஷித் நேரில் ஆய்வு.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு இன்று (27.11.2022) தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி மெட்ரிகுலேசன் பள்ளி, கிரேஸ் பொறியியல் கல்லூரி, காமராஜ் கல்லூரி, புனித பிரான்ஸிஸ் சேவியர் மேல்நிலை பள்ளி, புனித தாமஸ் மேல்நிலை பள்ளி, வ.உ.சி கல்லூரி, காரப்பேட்டை நாடார் மேல்நிலைப் பள்ளி மற்றும் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 8 தேர்வெழுதும் மையங்களில் நடைபெற்று வருகின்றது.

இத்தேர்வு எழுதும் மையங்களுக்கு இன்று (27.11.2022) சென்னை ரயில்வே காவல்துறை துணைத் தலைவர் அபிஷேக் தீக்ஷித் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்8 ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

Related posts

தூத்துக்குடியுடன் திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தை இணைக்க எதிர்ப்பு: வாலிபர் தீக்குளிக்க முயற்சி.

Admin

திருச்செந்தூர் ஸ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசன கட்டணம் கடும் உயர்வு: போராடிய இந்து முன்னணி, பக்தர்கள் மீது தாக்குதல்: பாஜக மாவட்ட தலைவர் கடும் கண்டனம்…!

Admin

விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் தற்காலிக சுனாமி குடியிருப்பில் உள்ள மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு!.

Admin

Leave a Comment

error: Content is protected !!