Thupparithal
செய்திகள்

டிச.31க்குள் தீப்பெட்டித் தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்; ஆட்சியா் தகவல்!.

தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பட்டி தொழிற்சாலைகள் உரிமத்தை டிசம்பா் 31ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது; தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டித் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்ட உரிமம் டிசம்பா் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆகவே, உரிய படிவங்களைச் சமா்ப்பித்து உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

தீப்பெட்டி தொழிற்சாலை உரிமதாரா்கள், உரிமம் புதுப்பிக்கும் மனுவுடன் கடந்த 12 மாதங்களுக்குரிய மாத வாரியான தீப்பெட்டி உற்பத்தி, கந்தகம், குளோரைடு வரவு செலவு விவரப்பட்டியல் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பம் அனுப்புவதற்கு முன்பு 30 தினங்களுக்குத் தேவையான ரசாயனப் பொருள்களை ஒரு தடவை அளவிற்கு மிகாமல் இருப்பு வைத்துக் கொண்டு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு விண்ணப்பங்கள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

உரிமம் புதுப்பித்தல் நடைமுறை: 2022-ஆம் ஆண்டிற்கான உரிமம் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை அதற்கான உரிமக் கட்டணத்தைச் செலுத்தி, செலுத்து சீட்டின் அசலினை புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்துடன் இணைத்து வரும், டிசம்பா் 31ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு ஜனவரி 1 முதல், உரிமக் கட்டணத்துடன் தாமதக் கட்டணம் ரூ.2 ஆயிரம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அதோடு, தாமதத்திற்கான தகுந்த விளக்கத்தை உரிமதாரா் தெரிவிப்பது அவசியம்.

தாமதக் கட்டணத்துடன் மனுச் செய்து கொள்ள வேண்டிய கடைசி நாள் 31.01.2023 ஆகும். அதன் பிறகு எக்காரணத்தைக் கொண்டும் உரிமம் புதுப்பிக்கக் கோரும் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

உரிமம் புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தில் ரூ.2-க்கான முத்திரை வில்லை ஒட்டப்பட்டிருக்க வேண்டும். உரிமம் புதுப்பித்தல் கட்டணம் 5ஆண்டுகளுக்கு, படிவம் 2 மற்றும் 8 க்கு ரூ.5ஆயிரம், படிவம்9-க்கு ரூ.10 ஆயிரம் ஆகும். இக்கட்டணத்தை வலைதளத்தில் இ.செலான் மூலம் பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் உரிய கணக்குத் தலைப்பில் செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Related posts

தமிழக கேபிள் ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் ரத்ததான முகாம்!.

Admin

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு இவர் மட்டுமே தான் காரணமா? சி.பி.ஐ விசாரணை அறிக்கையை கண்டு பொது மக்கள் அதிர்ச்சி; கம்யூனிஸ்ட் அர்ச்சுணன் விவரிக்கிறார், முழு பின்னணி குறித்த விரிவான செய்தி!.

Admin

7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கான பாஸ் தி பால் கோப்பைக்கான வரவேற்பு – ஹாக்கி விளையாடிய அமைச்சர் கீதா ஜீவன்,, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்.

Admin

Leave a Comment

error: Content is protected !!