Thupparithal
அரசியல்

கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்!

கர்ப்பிணி பெண்களுக்கு  ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி, தூத்துக்குடி, புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமை வகித்தார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மற்றும் மகளிர் திட்ட இயக்குநர் வீரபத்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் வசுமதி அம்பா சங்கர் வரவேற்புரையாற்றினார்.

மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.

நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை இணை இயக்குநர் பொற்ச்செல்வன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பிரம்ம சக்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜ், நாகராஜ், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் ஊராட்சி ஓன்றிய குழு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், அவைத் தலைவர் அருணாச்சலம்,  தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோனிதனுஷ்பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பிறந்தநாளை முன்னிட்டு, கோவில்பட்டியிலுள்ள “அருள்மிகு” ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் கோயிலில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Admin

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்; தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தனர்.

Admin

வியாபாரிகள் மத்தியில் திமுகவிற்கு நல்ல வரவேற்பு…. தூத்துக்குடியில் கனிமொழி-யை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து புதிய சகாப்தம் படைக்க பாடுபடுவோம்… மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மேயர் ஜெகன் பேச்சு..!

Admin

Leave a Comment

error: Content is protected !!