Thupparithal
செய்திகள்

74வது குடியரசு தின விழா; தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பில் மூவர்ண கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி, கடற்கரை சாலையில் உள்ள பெல் ஹோட்டல் அருகில் தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பில் மூவர்ண கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியானது, அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தென்மண்டல அமைப்பாளரும், தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு மாவட்ட தலைவருமான பாட்டாளி பிரான்சிஸ் தலைமையில், செயலாளர் மார்க் மகேஷ் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி டவுண் டி.எஸ்.பி சத்தியராஜ் கலந்து கொண்டு மூவர்ண கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், 40வது வார்டு பனிமயமாதா கோவில் பகுதி மாமன்ற உறுப்பினர் ரிக்டா ஆர்தர் மச்சாது, வஉசி பேரவை மாநில தலைவர் சைவத்திரு கீதா மாரியப்பன், மாவட்ட துணை தலைவர் சாம்ராஜ், அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மார்க்கின் ராபர்ட், சங்க உறுப்பினர்கள் முத்து மாரியப்பன், பரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இறுதியாக, மாவட்ட பொருளாளர் எஸ்.டி.கணேசன் நன்றி கூறினார்.

Related posts

அவசர கோலத்தில் நடந்து முடிந்த குரூஸ் பர்னாந்து நினைவு மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா; அரசு விழா போல் இல்லாமல் சினிமா சூட்டிங் முடித்து விட்டு கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கிளம்பி சென்றதாக பொது மக்கள் குற்றச்சாட்டு!.

Admin

தூத்துக்குடி மாநகர தந்தை ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்திற்கு நகரின் மையப் பகுதியில் மணிமண்டபம் அரசு அமைக்க வேண்டும், தவறும் பட்சத்தில் மக்களையும்,வியாபாரிகளையும் திரட்டி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக மீனவ அமைப்புகள் தமிழக அரசுக்கு எச்சரிக்கை.

Admin

தூத்துக்குடி விமான நிலையத்தில் தொல்.திருமாவளவனிடம் மனு அளிக்க வந்த ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள்; ஓட ஓட விரட்டிய விசிக கட்சியினர்; விமான நிலையத்தில் பரபரப்பு!.

Admin

Leave a Comment

error: Content is protected !!