தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் திருக்குறள் வாழ்வியலாக்க மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருக்குறள் கூட்டமைப்பு துணைத் தலைவர் கருத்த பாண்டி, தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ மற்றும் திரைப்பட இயக்குனர் வி.சேகர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர் தமிழரசன், மகளிர் மேம்பாட்டு துறை தலைவர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், கலை இயக்கிய பிரிவு தலைவர் அமலபுஷ்பம், திருக்குறள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஆதிலிங்கம், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, நிர்வாகிகள் அழகர்சாமி, கோபி, முருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.