Thupparithal
செய்திகள்

வாறுகால் இருக்கு மறுகால் இல்லை; பல ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்; மார்பளவு தண்ணீரில் வயலுக்கு நீந்திச்செல்லும் விவசாயிகள்!

துத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மாமுநைனார்புரம் கிராமத்தில் பஞ்சாயத்துக்கு சொந்தமான குட்டையில் மறுகால் வசதி செய்து தரப்படாததால், விவசாய நிலங்கள் அருகே உள்ள வாறுகாலில் இருந்து வரும் மழைநீரானது வெளியே செல்ல வழியின்றி, விவசாய நிலங்களிலும், வாறுகாலிலும் குளம்போல தேங்கி காணப்படுகிறது.

இதனால் இப்பகுதி விவசாயிகள் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய் செடிகள் உட்பட அனைத்து பயிர்களும் நீரில் மூழ்கி அழிந்து நாசமாகியுள்ளன.

மேலும், விவசாயிகள் விதைத்தல், வேலை ஆட்கள் கூலி, உரமிடுதல், பூச்சி மருந்து தெளித்தல் என ரூ.30,000 வரை செலவு செய்து பேணிபாதுகாத்துவந்த பயிர்கள் எல்லாம் நீரில் மூழ்கியதைக் கண்டு பெரும் சோகத்தில் உள்ளனர்.

அதுமட்டுமின்றி, விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு செல்வதற்கே வாறுகாலில் ஓடும் மார்பளவு தண்ணீரில் நீந்தித்தான் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்த வருகிறது. இதுபோன்ற விவசாயிகள் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் சந்தித்து வருகின்றனர். இது பற்றி விவசாயிகள் பல ஆண்டுகளாக விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் என தமிழக முதல்வரின் தனிப்பிரிவு வரை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுத்த பாடில்லை என்று மிகவும் வேதனையுடன் கூறுகின்றனர்.

இந்த நிலங்களைச் சேர்ந்த விவசாயிகள். கடன் வாங்கி விவசாயம் செய்து வரும் நிலையில், மழைநீர் செல்ல மறுகால் அமைத்து தராமல் வெறுமனே சரிசெய்து தருகிறோம் என்று மட்டுமே கூறி விட்டு காலம் தாழ்த்தி வரும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால் ஆண்டுதோறும் இது போன்ற இன்னலுக்கு ஆளாகி மேலும் கடனாளியாகி கவலையுற்று வருகின்றனர்.

எனவே, இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வாறுகாலில் இருந்து செல்லும் உபரி நீர் விவசாய நிலங்களில் தேங்காதவாறு வெளியேற மறுகால் வசதி ஏற்படுத்தி தந்தால் மட்டுமே 50 ஏக்கர் விவசாய நிலத்தையும் அந்த நிலத்தை நம்பி இருக்கும் விவசாயிகளையும் பாதுகாக்க முடியும் என்றும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இதில் தனி கவனம் எடுத்து துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் மழைநீர் தேங்காதவாறு மறுகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகள் தலையாய கோரிக்கையாக உள்ளது.

Related posts

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட தூத்துக்குடி-கோயம்புத்தூர் ரெயில் சேவையை மீண்டும் இயக்க வேண்டும்- காங்கிரஸ் மாவட்ட தலைவர் முரளிதரன் கடிதம்!.

Admin

திருச்செந்தூர் ஸ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசன கட்டணம் கடும் உயர்வு: போராடிய இந்து முன்னணி, பக்தர்கள் மீது தாக்குதல்: பாஜக மாவட்ட தலைவர் கடும் கண்டனம்…!

Admin

புல்வாமா தாக்குதல் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி; எட்டயபுரம், அரசு தொடக்கப் பள்ளியில் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் முன்னிலையில் மவுன அஞ்சலி!.

Admin

Leave a Comment

error: Content is protected !!