Thupparithal
செய்திகள்

புல்வாமா தாக்குதல் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி; எட்டயபுரம், அரசு தொடக்கப் பள்ளியில் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் முன்னிலையில் மவுன அஞ்சலி!.

2019 பிப்ரவரி 14-ஆம் தேதி புல்வாமா தாக்குதல் நடந்தது. இதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த சிஆா்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.
உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் இராமனூத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் இப்ராஹிம் தலைமையில் எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் முன்னிலையில், மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னா் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்கள் பேரணியாக மௌன அஞ்சலி ஊர்வலம் சென்றனர்.

இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியை இந்திரா, தன்னார்வலர் ஐயப்பன், கிளைச் செயலாளர் காளியப்பன் உட்பட பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனர்.

Related posts

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு!.

Admin

21-ம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு நிலைமையா? – குடிசை வீட்டில் இருளில் தவிக்கும் மீனவ மக்கள் – பட்டாவிற்காக 18 ஆண்டுகளாக அலைகலைக்கும் அரசு அதிகாரிகள்!

Admin

கருத்தடை அறுவை சிகிச்சையில் அலட்சியம்; தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!.

Admin

Leave a Comment

error: Content is protected !!