Thupparithal
செய்திகள்

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நலச்சங்க மாநில மாநாடு-டிச 4 ஆம் தேதி நடக்கிறது.

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்க 22 வது மாநில பொது குழு மாநாடு வரும் 4ந் தேதி தூத்துக்குடியில் நடைபெற உள்ளது.. இது குறித்து சங்க மாநில தலைவர் வீரமுத்து தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்.. அமைப்பு ரீதியான மாநில மாநாடு கூட்டம் டிசம்பர் 4ஆம் தேதி தூத்துக்குடி மாணிக்க மஹாலில் நடைபெறுகிறது.

மாநாட்டில் கேபிள் டிவி ஆபரேட்டர்களை காப்பாற்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. பல நலத்திட்டங்கள் வழங்கி இருக்கிறோம். மத்திய, மாநில அரசுகள் எங்களுடைய தொழிலுக்கு பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. எங்களுடைய தொழிலை நசுக்கி வருகிறார்கள். எனவே கேபிள் டிவி ஆபரேட்டர்களை பாதுகாக்கவும், கேபிள் டிவி வளர்ச்சியை உருவாக்க மாநாட்டின் தீர்மானம் நிறைவேற்றப்படும். தொழில்நுட்ப வளர்ச்சி இணையதள சட்டத்தால் பாதிப்புகள் நிறைய உள்ளது என்றார்.

தொடர்ந்து தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்க மாநில பொதுச் செயலாளர் வெள்ளைச்சாமி பேசுகையில்…மாணிக்க மஹாலில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு முன்னதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நடைபெற உள்ளது. பீங்கான் ஆபீஸ் முன்பிருந்து தொடங்கும் இந்த ஓட்டத்தில் வெள்ளை சீருடை அணிந்தவாறு அனைவரும் கலந்து கொள்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து மாநாட்டில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். செல்போனில் தொலைக்காட்சியை காட்டும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. அதனை தடுக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம் என்றார்.

பேட்டியின் போது, தமிழ்நாடு கேபிள் ஆபரேட்டர்கள் சங்க மாநில துணைத்தலைவர்கள் தாமோதரன், ராஜேந்திர பிரபு, மாநில துணை செயலாளர் சிவகுமார், மாவட்ட செயலாளர் கண்ணன், சங்க தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் ராஜு, தூத்துக்குடி தாலுகா தலைவர் செல்வராஜ், தூத்துக்குடி தாலுகா செயலாளர் வைகுண்ட ராமன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Related posts

21-ம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு நிலைமையா? – குடிசை வீட்டில் இருளில் தவிக்கும் மீனவ மக்கள் – பட்டாவிற்காக 18 ஆண்டுகளாக அலைகலைக்கும் அரசு அதிகாரிகள்!

Admin

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் விளம்பர பேனர் சரிந்து விழுந்ததால் பரபரப்பு; 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நின்று கொண்டிருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை..

Admin

தூத்துக்குடி, சிலுவைப்பட்டியில் நீர், மோர் பந்தலை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் திறந்து வைத்தார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!