Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினால் மக்களுக்கு எந்த நோயும் ஏற்படவில்லை. சிலர் வீண் வதந்திகள் பரப்பி வருகின்றனர்..மக்கள் நம்ப வேண்டாம்- ஸ்டெர்லைட் ஆலையில் பல வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வந்த பணியாளர்கள் கூட்டாக பேட்டி…!

கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை மீது பல்வேறு குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆலை மூடப்பட்டது.. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் பல வருடங்களாக பணியாற்றி வந்த பணியாளர்கள் தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தனர்..

இதுகுறித்து ஸ்டெர்லைட் ஆலையில் 25 வருடங்களாக பணி புரிந்த ஜெயா கூறுகையில், கடந்த 2018 மே மாதம் ஒரு குற்றச்சாட்டை உருவாக்கி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை இயக்கம் தடைப்பட்டு மூடப்பட்டது.. 27 வருடமாக ஸ்டெர்லைட் ஆலையில் வேலை பார்த்து வருகிறேன்.. முக்கிய குற்றச்சாட்டு என்னவென்றால் ஆலையில் பணி செய்பவர்கள் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை இருக்கிறது.. குழந்தைகள் கருவில் உயிர் பிரிகிறது.. என்ற குற்றச்சாட்டு வைத்திருந்தார்கள்.. அது துளி அளவும் உண்மை அல்ல..

ஆலையில் பெண்கள் பணி செய்து வந்தனர்.. அவர்கள் அனைவரும் காலகாலத்தில் திருமணம் முடித்து குழந்தைகள் பெற்று நல்ல நிலைமையில் உள்ளனர்.. எந்த ஒரு குறைபாடும் கிடையாது. ஸ்டெர்லைட் ஆலையால் நோய் வரும் என்றால் ஸ்டெர்லைட் ஆலையில் பணி செய்தவறுக்கு வந்திருக்க வேண்டும்.அங்குள்ள குடும்பத்தாருக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. மக்கள் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை நம்பக்கூடாது.. அந்த பயத்திலிருந்து வெளியே வரவேண்டும் என்றார்..

இதுகுறித்து, ஆலையில் 20 வருடமாக பணிபுரிந்து வந்த மாரியப்பன் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையால் பிரச்சனை என்றால் முதலில் ஆலையில் பணி செய்த எங்களை தான் பாதித்திருக்கும் ஆனால் அப்படி அல்ல.. ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் நாங்கள் ஆப்பரேட் பண்ணக்கூடிய அனைத்தும் குறிப்பாக, டெக்னாலஜி வேர்ல்டு நம்பர் ஒன் டெக்னாலஜி காப்பர் உற்பத்தியில்.. சுற்றுப்புற சூழ்நிலை பேணி காக்க வேண்டும் என்ற ஒரே உயரிய நோக்கத்திற்காக அனைத்து டெக்னாலஜி அமெரிக்காவிலிருந்து உயரிய தொழில்நுட்பங்களைக் கொண்டு சுற்றுப்புற சூழலை பேணிக்காட்த்து வருகின்றோம்.. இங்கு இருக்கின்ற சல்பியூரிக் ஆசிட் பிளான்ட் கனடா டெக்னாலஜி, பாஸ்பாரிக் டெக்னாலஜி ப்ரைஸில், குறிப்பாக டெக்னாலஜி பற்றி குறிப்பிடுவது ஏனென்றால் பன்னாட்டு தொழிற்சாலையாக இது கருதப்படுகிறது.

மூன்று வருடம் முன்னர் கொரானா நோய் தொற்று வரும் போது ஸ்டெர்லைட் ஆலையில் இரண்டு ஆக்சிஜன் பிளான்ட் 7 நாட்களில் நம்மளுடைய பொறியாளர்கள் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு வந்து கிட்டத்தட்ட மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்களுடைய வாழ்க்கை மறு பிழைப்பு பிழைத்திருக்கிறார்கள்.. தொழில்நுட்பம் இருப்பதால் குறுகிய காலங்களில் இந்த பிளான்ட் எந்த வித பிரச்சனை இல்லாமல் சரியான விகிதத்தில் ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டது. உயரிய தொழில்நுட்பங்களைக் கொண்டு அனைத்து விதத்திலும் நடத்தி வந்தோம்..

கம்பெனியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைத்தனர். அதாவது, கேன்சர் வரும், தொழிற்சாலை கழிவுகளை கடலில் கலக்கின்றனர்.. இதனால் மழை பெய்யவில்லை ஆகிய பல்வேறு குற்றச்சாட்டுகளை அடிப்படை ஆதாரங்கள் இன்றி முன் வைத்தனர். ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரமாக பல்வேறு உண்மைகளை அறிவியல் பூர்வமாக நாம் பல்வேறு காலகட்டங்களில் நம்முடைய தூத்துக்குடி நகரத்தில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பு மக்களையும் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து தரப்பு நியாயங்களை தெளிவுபடுத்தி உள்ளோம்.

தூத்துக்குடியில் மட்டுமல்லாது தூத்துக்குடி கடற்கரை கிராம மக்கள் கம்பெனியை சுற்றி இருக்கின்ற 21 கிராம மக்கள் அனைத்து மக்களையும் கம்பெனி உண்மை தன்மை புரிந்து கொண்டு திறக்க வேண்டும் என்று உயரிய நோக்கத்தில் ஒன்றிணைந்து இதில் பாடுபடுகிறோம்.. 4,000 மக்களுக்கு வேலை இல்லாதது வருத்தமான விஷயமாக உள்ளது.. பல்வேறு காலகட்டங்களில் எங்கள் தரப்பு நியாயங்களை கூறி இருக்கின்றோம்..வியாபாரம் செழிக்க வேண்டும். ஒவ்வொரு இளைஞர்களும் படித்தவர்கள் ஸ்டெர்லைட் மட்டுமல்லாது பல கம்பெனிகள் வரவேண்டும். நகரம் மென்மேலும் வளர வேண்டும் என்ற உயர்நோக்கத்தில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும் என்றார்..

15 வருடமாக ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்து வந்த மருத்துவர் கைலாசம் கூறுகையில், ஆலையில் பணிபுரியும் தனிமனித பாதுகாப்பை 6 மாதம், 3 மாதம், ஒரு சில பரிசோதனை இரண்டு வருடங்கள் என்று உடல் நலம் பரிசோதனை மேற்கொள்ளப்படும்… இதுநாள் வரை தொழிற்சாலையால் வியாதி என்று வரவில்லை. மேலும், பொது மக்களுக்கும் மருத்துவ வசதி உதவி செய்து வருகிறோம். சிறப்பு சிகிச்சைகள் தேவைப்பட்டால் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி உதவி செய்கின்றோம். ஆனால் எங்கள் மீது பொய் குற்றச்சாட்டு வைக்கின்றன.. எந்த ஒரு ஆதாரமும் கிடையாது.. பசுமை தீர்ப்பாயம் ஆகட்டும் பல நீதிமன்றங்களாகட்டும் எழுத்துப்பூர்வமாக நாங்கள் எடுத்து வைத்துள்ளோம்.. தூத்துக்குடி மற்றும் தொழிற்சாலைகள் முன்னேற்றத்துடன் செழிப்பாக வேண்டும் என்றார். .

பின்னர், ஸ்டெர்லைட் ஆலை பணியாளர்கள் 15க்கும் மேற்பட்டோர் தங்களது மருத்துவ பரிசோதனை அறிக்கைகளையும் வெளியிட்டனர்.

Related posts

கடலோர காவல் படையினர் ஒரு சிலருக்கு நீச்சல் கூட அடிக்க தெரியாது.. அவர்களை நம்பி சென்றால் எப்படி பிழைக்க முடியும்-தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய பேச்சால் சர்ச்சை…!

Admin

தமிழ்நாடு ஹச் எம் எஸ் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் பேரவை சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு!.

Admin

பொட்டல்காடு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் எம்.ஆர்யா ஸ்கிப்பிங் விளையாட்டில் உலக சாதனை..!.

Admin

Leave a Comment

error: Content is protected !!