Thupparithal
செய்திகள்

கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சுதாகரன் வரவேற்புரை வழங்க கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு 198 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கினார்.

நிகழ்ச்சியில், நகர் மன்ற உறுப்பினர்கள் ஜேஸ்மின் லூர்து மேரி, கனகராஜ்,உதவி உடற்கல்வி இயக்குனர் ஆனந்த பிரபாகரன், மாவட்ட திமுக சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் அமலி அந்தோணி பிரகாஷ் உட்பட ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக, ஆசிரியர் கணேஷ் நன்றி கூறினார்.

Related posts

துாத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 24 அப்ரென்டிஸ் பணிக்கு வரும் 14ல் தேர்வு; ஐ.டி.ஐ., படித்தவர்களே மிஸ் பண்ணாதீங்க!.

Admin

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் பகுதியில் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இன்று திறக்கப்பட்டது.

Admin

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட தூத்துக்குடி-கோயம்புத்தூர் ரெயில் சேவையை மீண்டும் இயக்க வேண்டும்- காங்கிரஸ் மாவட்ட தலைவர் முரளிதரன் கடிதம்!.

Admin

Leave a Comment

error: Content is protected !!