தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சாத்தூர் சாலையில் எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் தமிழ் கல்ச்சுரல் &யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் 8ம் ஆண்டு மாநில அளவிலான யோகாசன போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 1,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு யோகாசனத்தில் பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினர்.
தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி கழக பொதுச் செயலாளர் மாரியப்பன் தலைமையில் எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி செயலாளர் கண்ணன் முன்னணியில் யோகாசனத்தில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வெற்றி கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி முதல்வர் செல்வராஜ், தமிழ் கல்ச்சுரல் &யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் தலைவர் அழகுதுரை, தமிழ் கல்ச்சுரல் &யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் துணைத் தலைவர் கிருஷ்ணவேணி, தமிழ் கல்ச்சுரல் &யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் பொருளாளர் சிவ சக்திவேல் முருகன், மற்றும் கோமதி, கோபி, முருகன், உள்ளிட்ட மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்,பலர் கலந்து கொண்டனர்.