தூத்துக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் மு.பொன்னையா அறிக்கையில் கூறியுள்ளதாவது; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தபால்களை பொது மக்களுக்கு குறைந்த செலவில் குறிப்பிட்ட நேரத்தில் சென்றடையும் வண்ணம் அஞ்சலகங்களில் விரைவு மற்றும் பார்சல் சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் மாலை 07:30 மணி வரை பதிவு தபால் மற்றும் பார்சல் புக்கிங் சேவைகளும், மாலை 08:00 மணி வரை விரைவு தபால்கள் புக்கிங் சேவைகளும் அளிக்கப்பட்டு வருகிறது .
பொது மக்களுக்கு வசதியாக இந்த சேவை நேரத்தை குறிப்பிட்ட அஞ்சலகங்களில் நீடித்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது . அதன்படி தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட நியூ காலனி மற்றும் போல்நாயக்கன்பேட்டை துணை அஞ்சலகங்களில் மாலை 06:00 மணி வரை பதிவு விரைவு மற்றும் பார்சல் தபால்கள் புக்கிங் செய்யும் வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த கால நீட்டிப்பு அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளதுஎனவே பொதுமக்கள் இந்த சேவையை பெற்று பயனடையுமாறு கேட்டு கொண்டுள்ளார்.