Thupparithal
செய்திகள்

கோடைகாலம் தொடங்கியது உடலை எப்படி பாதுகாத்து கொள்ளவேண்டும்-தூத்துக்குடியில் நாற்பதாண்டு சேவையாற்றும் பிரபல மருத்துவர் அருள்ராஜ் விளக்குகிறார்.

கோடைகாலத்தில் மக்களை தாக்கும் நோயிடம் இருந்து எப்படி நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடியில் நாற்பது ஆண்டுகளாக மருத்துவத்துறையில் சேவையாற்றிவரும் பிரபல மருத்துவர் சுந்தரம் அருள்ராஜ்-ன் பிரத்யோக பேட்டி உங்களுக்காக,

இது குறித்து அவர் கூறுகையில், கோடைகாலத்தில், வெயில் அதிகம் இருக்கின்ற நேரத்தில் நமது உடம்பில் உள்ள நீர்ச்சத்து வெளியே போய் விடும், அந்நேரத்தில் சிறுநீர் குறைவாக போகும் போது கல்லடைப்பு ஏற்படும்.

நாம் என்ன செய்தாலும் அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும். சிறுநீர் வெளியேறும் போது அது எவ்வாறு இருக்கிறது என பார்க்க வேண்டும். அது வெள்ளையாக இருக்கும் பட்சத்தில் நலம், இல்லையென்றால் தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும். சாதாரணமாக தண்ணீர் அருந்தினாலே போதுமானது, ஜூஸ், இளநீர் வாங்கி அருந்த வேண்டும் என்று நினைக்கவேண்டாம்.

தினசரி குறைந்தது 2 லிட்டர், 3 லிட்டர் வரைக்கும் அருந்த வேண்டும்.

சில பேர் தண்ணீர் அருந்த முடியாமால் இருதய நோயாளி, கிட்னி நோயாளி அவர்கள் ஒரு நாளைக்கு 500 மில்லி அருந்தலாம். ஒரு நாளைக்கு ஆயிரம் குடிக்கலாம்.

சிலருக்கு அதிக வியர்வை ஏற்படும் அதுக்கு தினசரி காலையில், ஒருமுறை மாலை ஒருமுறை நல்ல தண்ணிரில் சோப்பு போட்டு குளிக்க வேண்டும். அப்போது தான் சுத்தமாக இருக்கும்.

சாலையோர கடைகளில் சுவையான பரோட்டா அநேக இடங்களில் கிடைக்கும். பரோட்டோ சாப்பிடும் பட்சத்தில் அடுத்த நாள் டாக்டர் தான் வரணும் உங்க வீட்டிற்கு, கொரோனா என்கின்ற அரக்கனிடம் இருந்து தப்பி வந்து இருக்கிறோம்.

மேலும், ப்ளூ கிருமி என்று தற்போது வர தொடங்கியுள்ளது. அதற்கு 120 ரூபாய் மதிப்பில் ஊசி செலுத்தி கொள்ளலாம். இதனை மருத்துவரை அணுகி செலுத்தினால் மிகவும் நல்லது என விளக்கமளித்தார்.

Related posts

தருவைகுளம் கால்வாயில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய விவசாயிகள்.

Admin

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு இவர் மட்டுமே தான் காரணமா? சி.பி.ஐ விசாரணை அறிக்கையை கண்டு பொது மக்கள் அதிர்ச்சி; கம்யூனிஸ்ட் அர்ச்சுணன் விவரிக்கிறார், முழு பின்னணி குறித்த விரிவான செய்தி!.

Admin

தசரா குடில் அமைப்பதற்கு மின்வாரியம் சார்பில் வைப்பு தொகை; தசரா குழுவினர் உபயோகித்த மின் கட்டணத்தை கழித்து மீத தொகையை குழுவினரிடம் ஒப்படைக்கவில்லை என்றால் தூத்துக்குடி மின் வாரிய தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை…!

Admin

Leave a Comment

error: Content is protected !!