தூத்துக்குடி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு இன்று (20.10.2022) தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார் குடியுரிமை வட்டல் வழங்கள் தாசில்தார் ஜஸ்டின் செல்லதுரை மற்றும் அரசு அலுவலர்கள் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அதேபோன்று தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான புல் தோட்டம் நுண் உரகிடங்கு மைய வளாகத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ ஆகியோர் மரக்கன்றுகளை நட்டி சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாநகராட்சி பணியாளர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.