Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி மாவட்டம் தனியாக உருவாக்கப்பட்டு 37வது ஆண்டு துவங்கியதை முன்னிட்டு அரசு இசைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

திருநெல்வேலியிலிருந்து 1986ஆம் ஆண்டு அக்டோபர் 20-ம் நாள் தனி மாவட்டமாக தூத்துக்குடி உதயமாகியது. இதனை கொண்டாடும் விதமாக, தூத்துக்குடி, அரசு இசைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

இதனை மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் R. சரவணக்குமார் முன்னிலை வகித்து மரக்கன்றுகள் நட்டினார்.

இவ்விழாவில் 3 வது வார்டு உறுப்பினர் P. பாரதிராஜா, இசைப்பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமசெல்வி , அலுவலக பணியாளர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .

மேலும், தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியானது டி.சவேரியார்புரம் , சிலுவைப்பட்டி அஞ்சல், தூத்துக்குடி 2 என்ற முகவரியில் இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது . இப்பள்ளியில் மாணவர்கள் சேர்ந்து பயன் பெறுமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது . இதர விவரங்களுக்கு அலைபேசி எண் 9487739296 என்ற நம்பரை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

உலக வளாி போட்டிக்கான தோ்வு தூத்துக்குடி தருவை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

Admin

தமிழ் கடவுளின் திருவிழாவில் தமிழன் தங்கி விரதமிருக்க தடையா? இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார் கட்டம்!

Admin

7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கான பாஸ் தி பால் கோப்பைக்கான வரவேற்பு – ஹாக்கி விளையாடிய அமைச்சர் கீதா ஜீவன்,, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்.

Admin

Leave a Comment

error: Content is protected !!