Thupparithal
ஆன்மிகம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பூஜை நேரம் மாற்றம்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு நடை திறப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இதன்படி இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, காலை 5.15 மணிக்கு தனுர் மாத பூஜை, காலை 8 மணிக்கு கால சந்தி பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மதியம் 12.30 மணிக்கு நடைத்திருக்காப்பிடுதல் நடைபெறும்.

மாலை 4 மணிக்கு நடைதிறப்பு, மாலை 5 மணிக்கு சாயரட்சபூஜை, இரவு 8 மணிக்கு ராக்கால பூஜையும், இரவு 8.30 மணிக்கு திருகாப்பிடுதல் நடைபெறும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விழாக்காலங்களில் பூஜை நேரம் மாறுதலுக்கு உட்பட்டது என கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Related posts

செல்வம் பட்டரிடம் பயின்ற தூத்துக்குடி மாணவர்கள் பாசக்காரர்கள் என்று உலகம் முழுவதும் தெரியப்படுத்த வேண்டும்-மேயர் ஜெகன் பெரியசாமி அசத்தல் பேச்சு!.

Admin

தூத்துக்குடி சண்முகபுரம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Admin

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு பிரமாண்ட ஏற்பாடு; திருக்கோயில், இணை ஆணையர் அறிக்கை!.

Admin

Leave a Comment

error: Content is protected !!