Thupparithal
அரசியல்

கருணாநிதி பிறந்த நாளையோட்டி துத்துக்குடி, கோவில்பட்டி அரசு மருத்துவமணையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

திமுக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி 100வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி அரசு மருத்துவமணையில் நேற்று (03.06.2023) பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி மற்றும் அரசு மருத்துவமணையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து பொருட்களை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழங்கினார்.

நிகழ்ச்சியில், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.

மேலும், கோவில்பட்டி நகர திமுக சார்பில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தங்க மோதிரங்களை அமைச்சர் கீதாஜீவன் அணிவித்து பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து பொருட்களைவழங்கினார்.

நிகழ்ச்சியில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இருந்தனர்.

Related posts

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி‌.கே. வாசன் பிறந்தநாள் விழா; தூத்துக்குடியில் ஆலோசனை கூட்டம்.

Admin

தமிழக முதல்வர் தூத்துக்குடி வருகை; அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!.

Admin

கோவில்பட்டி, அண்ணா பேருந்து நிலையத்திற்குள் இரவு நேரங்களில் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தாமாகவினர் காதில் பூ சுற்றி மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது.

Admin

Leave a Comment

error: Content is protected !!