Thupparithal
செய்திகள்

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற வகையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பனை விதைகளை நட்டு வைத்தார்.

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற வகையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணி பஞ்சாயத்துகுட்பட்ட பகுதியில் இன்று பனை விதை நடும் நிகழ்ச்சி அதிமுக நிர்வாகி பி.கே நாகராஜன் தலைமையில், நடைபெற்றது.

இதில், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டு இலுப்பையூரணி பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டு வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், மற்றும் அதிமுக நிர்வாகிகள் கோபி, முருகன், பழனி குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம்; சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் மயக்கத்தில் இருந்தும் விடாமல் கைது செய்த போலீசார்!.

Admin

விரால் மீன்கள் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அழைப்பு!.

Admin

ஆதிச்சநல்லூர், வஉசிதம்பரனார், வீரன் சுந்தரலிங்கனார்,வீரன் அழகு முத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் கல்வெட்டுகள் தூத்துக்குடி பூங்காவில்!.

Admin

Leave a Comment

error: Content is protected !!