Thupparithal
செய்திகள்

உடன்குடி பகுதிமக்கள் பனைஓலை சேகரிப்பில் தீவிரம்!.

கார்த்திகை தீப திருவிழா வருகிற 6-ந்தேதி இரவு கொண்டாடப்படுகிறது, இதையொட்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கோவில்முன்பு சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு நடத்தப்படும். வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி சுவாமிக்கு படையல் போட்டு வழிபடுவது வழக்கம். உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் பனைமரம் மூலம் உருவாக்கப்படும் சொக்கப்பனை கொளுத்தப்படும்.

சில இடங்களில் பப்பாளி மரம், வாழை மரம் மூலம் சொக்கப்பனை கொளுத்தப்படும். இவைகள் கிடைக்காத இடங்களில் உயரமான கம்புகளில் குறுக்காக கம்புகளைகட்டி பனைமர ஒலைகளை கட்டி கோவில் முன்பு வைத்து சொக்கப்பனை கொளுத்துவார்கள். இதற்காக உடன்குடி பகுதி மக்கள் பனைஓலை சேகரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 27ந் தேதி போராட்டம்; மருத்துவர் மற்றும் முடி திருத்துவோர் சங்கம் முடிவு!.

Admin

அம்பேத்கர் திருவருட்சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜக, பெரியார் மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் இடையே மோதல்….

Admin

தூத்துக்குடி அமமுக மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் ஜெயலலிதாவின் 6 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!.

Admin

Leave a Comment

error: Content is protected !!