தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் 13 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 25 கிலோ வாட் மின் திறன் கொண்ட 3 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு கூடுதல் மின் பழு சரி செய்து சீரான மின் விநியோகத்தினை முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ பங்கேற்று மின் விநியோகத்தை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் மேற்பொறியாளர் குருவம்மாள், செயற்பொறியாளர் கோவில்பட்டி கோட்டம் காளிமுத்து, உதவி செயற்பொறியாளர் கோவில்பட்டி குருசாமி உதவிசெயற்பொறியாளர்கள்
மிகாவேல், முனியசாமி தங்கராஜ் முருகேசன் மற்றும் காமநாயக்கன்பட்டி பங்குத்தந்தை அந்தோணி குருஸ் அடிகளார், ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, கிளைச் செயலாளர்கள் கிறிஸ்திரியா தியாகராஜன், சிறுபான்மை பிரிவு மாவட்ட இணை செயலாளர் ராஜேந்திரன், அவைத்தலைவர் சோழபுரம் முனியச்சாமி, பஞ்சாயத்து தலைவி கலைச்செல்வி, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமி ராஜ், அதிமுக நிர்வாகிகள் டேனியல், கடம்பூர் மாயா துரை, கடம்பூர் விஜி, கோபி, முருகன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.