தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே பனையூரை சேர்ந்த மல்லிகா வயது 55 இவர் தனது மகன் மற்றும் மக்களுடன் விளாத்திகுளத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார் அப்போது துளசி பெட்டி அருகே ஆட்டோ சென்றபோது விளாத்திகுளத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டு இருந்தது எதிர்பாராத விதமாக பேருந்து ஆட்டோ மீது மோதியது இதில் பயணித்த மல்லிகா வயது 55 சம்பவ இடத்திலேயே பலியானார்.
![](https://thupparithal.com/wp-content/uploads/2022/11/Screenshot_20221102_183633.jpg)
மேலும் ஆட்டோ ஓட்டுனர் உட்பட மூவர் பலத்த காயமடைந்தார் விபத்து குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விளாத்திகுளம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தார்.
மேலும் இது குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.