Thupparithal
செய்திகள்

உலக பத்திரிகையாளர் தினம்; தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி!.

உலக பத்திரிகை சுதந்திர நாள் என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் ‘மனித உரிமைகள் சாசனம்’ பகுதி 19இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
1993ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீத ஜீவன் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பத்திரிகையாளர்களை சந்தித்து உலக பத்திரிகையாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும், மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பத்திரிகையாளர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்வில், பத்திரிகையாளர்கள் தமிழ் முரசு சண்முகசுந்தரம், ஏபிபி நாடு பிரபாகரன், இந்து தமிழ் ஜாய்சன், மாலை முரசு மோகன்ராஜ், நியூஸ் தமிழ் முத்துராமன், ராஜ் டிவி மாரிராஜா, தந்தி டிவி விஜய், ஈடிவி பாரத் மணிகண்டன், தீக்கதிர் விக்னேஸ்வரன் மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related posts

தூத்துக்குடியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!

Admin

மாநில அளவிலான தமிழ்மொழி இலக்கிய தேர்வில் வேப்பலோடை அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி!.

Admin

வஉ. சிதம்பரனாரின் 86 வது ஜெயந்தி – விழா! – மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை!

Admin

Leave a Comment

error: Content is protected !!