Thupparithal
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியான நிலையில், கோவில்பட்டி திரையரங்கில் இனிப்பு வழங்கி பட்டையை கிளப்பிய ரசிகர்கள்.

தமிழகம் முழுவதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று (ஆக 10) தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகியது. இந்த திரைப்படம் வெளி வருவதை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் திரையரங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஆரவாரமாக கொண்டாடி வந்தனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள சத்தியபாமா திரையரங்கில் இன்று காலை 9 மணிக்கு ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இதனையொட்டி திரையரங்க வாயிலில் திரண்ட ரசிகர்கள் திரையரங்க வளாகத்தில் முன்னாள் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி தலைமையில் நகர செயலாளர் மகேஷ் பாலா, நகர இணை செயலாளர் மிலிட்டரி சந்திரசேகர், முன்னாள் வர்த்தக அணி இணைச் செயலாளர் சீனிவாசன், முன்னிலையில் சிறப்பு விருந்தினராக நகர மன்ற தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு ரஜினி ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

மேலும், திரையரங்க வாயிலில் பட்டாசு வெடித்து மேள, தாளங்கள் முழங்க ஜெயிலர் திரைப்பட வெளியீட்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இத்திரைப்பட விழாவில், போலீஸ் சீனிவாசன், ரஜினி நகர மன்ற உறுப்பினர்கள் நகர துணை செயலாளர் சுந்தரி, பாண்டி, சந்தானம், சேது ரவி, கனிராஜன், சதீஷ், இந்திர ராஜ், ஜாகிர் உசேன், மணி, கணேசன், ராஜீவ் காந்தி, கயத்தார் ஐயப்பன், ஜோதி காமாட்சி, கயத்தார் குருசாமி, மகளிர் அணி மேரி, லதா, உள்ளிட்டோர் ரஜினி ரசிகர்கள் அனைவரும் ரஜினி படத்துக்கு பாலாபிஷேகம் செய்து திஷ்டி சுத்தி தேங்காய் விடலை போட்டு கொண்டடினர்.

Related posts

குலசை முத்தாரம்மன் கோவில் பூஜை நேரம் மாற்றம்

Admin

சக்கை போடு போடும் ‘கருப்பு பக்கம்’ திரைப்படம் தூத்துக்குடி திரையரங்கில் 2-வது நாளாக இன்றும் ஹவுஸ்புல்..!

Admin

Leave a Comment

error: Content is protected !!