Thupparithal
செய்திகள்

அகில இந்திய அளவிலான போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் தங்கப்பதக்கங்களை வென்று அசத்தல்..

கோவா மாநிலம், வாஸ்கோடகாமாவில் அகில இந்திய அளவில் கராத்தே போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில், தமிழ்நாடு சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் மாவட்ட செயலாளர் முத்துராஜா தலைமையில் பங்கேற்றனர். இதில், கட்டா பிரிவில் கிருத்திக் சர்வான், ஆதர்ஷ், ஹர்ஷத் ராஜ் , சுவாலிக் முகமத், சோகித், ஆகாஷ், பிரனேஷ் தங்க பதக்கத்தையும் அண்டோ ஜெரால்ட் வெள்ளிப் பதக்கத்தையும் லோகேஷ் வெண்கல பதக்கத்தையும் சண்டை பிரிவில் ஹர்ஷத் ராஜ் மற்றும் ஆதர்ஷ் தங்க பதக்கத்தையும் பிரனேஷ், ஆகாஷ் , சுவாலிக் முகமது வெள்ளி பதக்கத்தையும் சோஹித் வெண்கல பதக்கத்தையும் வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட தலைவர் செந்தில் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

Related posts

வஉசி- யின் 86 நினைவு தினத்தை முன்னிட்டு தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சிதராங்கதன் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

Admin

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் விளம்பர பேனர் சரிந்து விழுந்ததால் பரபரப்பு; 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நின்று கொண்டிருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை..

Admin

கோடைகாலம் தொடங்கியது உடலை எப்படி பாதுகாத்து கொள்ளவேண்டும்-தூத்துக்குடியில் நாற்பதாண்டு சேவையாற்றும் பிரபல மருத்துவர் அருள்ராஜ் விளக்குகிறார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!