வ.உ.சி. யின் 86 வது ஜெயந்தி தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வைத்து அனுசரிக்கப்படுகிறது.
கப்பலோட்டிய தமிழன், செக்கு இழுத்த செம்மல், வ.உ. சிதம்பரனாரின் 86 வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் சிதராங்கதன் தலைமையில், மாநில ஓபிசி அணி துணை தலைவர் விவேகம் ரமேஷ், மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் பால்ராஜ் முன்னிலையில் வ உ சி- யின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
![](https://thupparithal.com/wp-content/uploads/2022/11/IMG-20221118-WA0134-1024x461.jpg)
நிகழ்ச்சியில், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, மாவட்ட துணை தலைவர் சிவராமன், தங்கம், தொழில் பிரிவு மாநில செயலாளர் கொம்பன் பாஸ்கர், விருந்தோம்பல் பிரிவு மாநில செயலாளர் பாலமுருகன், தேசிய செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மண்டல பொதுச்செயலாலர்கள் சண்முகசுந்தரம், மண்டல தலைவர்கள் வினோத், ராஜேஷ் கனி, மாதவன், மற்றும் மாவட்ட பாஜக நிர்வாகிகள், பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்