Thupparithal
செய்திகள்

இலம்பி தோல் கழலை நோய் தாக்கிய மாடுகளுக்கு கால்நடை மருந்தகங்களில் சிகிச்சை; ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்!.

தூத்துக்குடி மாவட்டத்தில் இலம்பி தோல் கழலை நோய் தாக்கிய மாடுகளுக்கு கால்நடை மருந்தகங்களில் சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாடுகளில் இலம்பி தோல் கழலைநோய் என்பது ஈ, கொசு போன்ற ரத்தம் உறிஞ்சு பூச்சிகள் மூலம் பரவக்கூடிய வைரஸ் நோய் ஆகும். பாதிக்கப்பட்ட மாடுகளில் காய்ச்சல், உடல் சோர்வு, தீவனம் உட்கொள்ளாமை, உடலின் அனைத்து பகுதிகளிலும் கொப்புளங்கள் மற்றும் கட்டிகள் போன்ற அறிகுறிகள் காணப்படும். பாதிக்கப்பட்டமாடுகளில் இருந்தும், நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து புதிதாக மாடுகள் வாங்கி வருவதன் மூலமாகவும் நல்ல ஆரோக்கியமான மாடுகளுக்கு நோய் பரவுகிறது.

இதனால் பால் உற்பத்தி குறையும், சினைபிடிப்பதில் பாதிப்புகள் ஏற்படும். தீவனம் சரியாக உட்கொள்ளாததால் உடல் எடை குறைந்து காணப்படும், கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில மாடுகளில் மடிநோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மேற்கூறிய நோய் அறிகுறிகள் கால்நடைகளில் தென்பட்டால் அருகில உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி, விவசாயிகள் மற்றும் பொதுமக்களை சிகிச்சை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு எட்டையபுரம் நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில், அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை!

Admin

கேபிள் டி.வி. தொழிலை பாதுகாத்திட கோரி சிபிஎம் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம்!

Admin

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) வரலாற்று துறை சார்பில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழா!.

Admin

Leave a Comment

error: Content is protected !!