காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தியின் 76 வது பிறந்த நாளை இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில், வ.உ.சி சாலை ரோடில் உள்ள தபசு மண்டபம் அருகில் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அதனை தொடர்ந்து, ஆரோக்கியபுரத்தில் உள்ள தொழுநோய் மருத்துவ மனையில் உள்ள நோயாளிகளுக்கு மதிய உணவு மாவட்ட தலைவர் சி.எஸ் முரளிதரன் வழங்கினார்
இந்நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரபோஸ், MC,மண்டல தலைவர்கள் சேகர், ராஜன், செந்தூர்பாண்டி, மாவட்ட துண தலைவர்கள் விஜயராஜ், அருணாசலம், பிரபாகரன், ஜெபராஜ், சின்னகாளை, மாவட்ட பொதுசெயலாளர் மைக்கேல், மாவட்ட செயலாளர்கள் கோபால், ஜெயகிங்ஸ்டன், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் , மாவட்ட அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், வார்டு தலைவர்கள் மகாலிங்கம், தனுஷ், விஸ்வநாதன், முத்துவேல், முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.