Thupparithal
செய்திகள்

கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட்டில் வாடகை பாக்கி கொடுக்காத சில கடைகளுக்கு சீல்; எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மார்க்கெட் முன்பு போராட்டம்!.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமாக மார்க்கெட் பகுதில் முத்துராமலிங்கத் தேவர் தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.

இக்கடைகளில் ஒரு சில கடைகள் வாடகை பாக்கி இருந்து வந்த நிலையில் தொடர்ந்து பலமுறை வாடகை கட்ட வலியுறுத்தியும் கட்டாதால் இன்று அங்கு சென்ற நகராட்சி அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர். இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மார்க்கெட் முன்பு உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் சீல் வைக்கப்பட்ட கடைகள் திறக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அனைவரும் கலந்து சென்றனர்.

இது குறித்து வியாபாரிகள் தங்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கவில்லை என குற்றம் சாட்டினர்.

அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைத்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related posts

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பது பற்றி ஆய்வு கூட்டம் மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

Admin

தூத்துக்குடியில், திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் இந்தி திணிப்பை எதிர்ப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!

Admin

தூத்துக்குடி அருகே நகரும் ரேஷன் கடை அமைக்க கோரி 100க்கு மேற்பட்டோர் தங்கள் ரேஷன் கார்டுகளை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து திடீர் தர்ணா போராட்டம். பரபரப்பு…!

Admin

Leave a Comment

error: Content is protected !!