Thupparithal
செய்திகள்

அனைத்து வீடுகளிலும் ‘பைபர் நெட் ‘ திட்டம் பி.எஸ்.என்.எல். முயற்சி!

லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு, இலவசமாக மோடம் ‘ வழங்கி , பைபர் நெட் திட்டத்தில், இணைக்க, பி .எஸ்.என்.எல்., நிர்வாகிகள் முயன்று வருகின்றனர்.

இது குறித்து பி.எஸ்.என்.எல்
அதிகாரிகள் கூறியதாவது
; பி.எஸ்.என்.எல்., லேண்ட்லைன் இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்களை, பைபர் நெட் திட்டத்திற்கு மாற்ற முயற்சித்து வருகிறோம் . அதற்கேற்ப பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் , தங்கள் தொலைபேசி எண்ணை மாற்றாமல், பைபர் நெட் இணைப்புக்கு மாறலாம். அவ்வாறு மாறும் வாடிக்கையாளர்களுக்கு, ஆறு மாதத்திற்கு 200 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

புதிய வடிகையாளர்களுக்கு நிறுவுதல் கட்டணம் 500 ரூபாய் தள்ளுபடி, மூன்று மாதங் காரிகளுக்கு 90 சதவீதம் தள் ளுபடியாக, 500 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

இது தவிர 6 மாதம் மற்றும் 12 மாத திட்டத்தில் சேரும் வாடிக் கையாளர்களுக்கு, இலவச வைபை மோடம் வழங்கப்படுகிறது. அடிப்படை திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் திட்டத்திற்கேற்ப இலவச மோடம் வழங்க, ஒப்பந்ததாரர்களுக்கு வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகள் வாயிலாக, பைபர் நெட் திட்டத்தில் வாடிக்கையாளர்களை அதிகரிக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

அம்பேத்கரின் 66-வது நினைவு தினம்; புதிய தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கனகராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்!

Admin

கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு ரயில் சேவை இயக்குவது குறித்து ஆராயப்படும் என எல்.முருகன் தெரிவித்தார்.

Admin

தேவர் திருமகனாரின் 115 வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை – எம்பி, அமைச்சர், மேயர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை!

Admin

Leave a Comment

error: Content is protected !!