Thupparithal
அரசியல்

தூத்துக்குடி அருகே உள்ள ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்த திமுக கட்சியினர் 10-க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகூட்பட்ட திமுக கட்சியை சேர்ந்த வடக்கு ஒன்றிய பிரதிநிதி கருப்பசாமி, திமுக கட்சியில் இருந்து விலகி முன்னாள் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் மோகன் தலைமையில் 10-க்க்கும் மேற்பட்ட திமுக கட்சியினர் விலகி கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ முன்னிலையில் திமுக கட்சி நிர்வாகிகள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில், நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள், கருங்குளம் ஒன்றிய செயலாளர் லட்சுமண பெருமாள், அம்மா பேரவை மாவட்ட இனச் செயலாளர் நீலகண்டன், நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அங்குசாமி, மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, கதர் ஸ்டோர்ஸ் சுப்புராஜ், அம்பிகை பாலன், குழந்தை ராஜ், ஜெய் சிங், பழனிகுமார், கோபி, முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

விளாத்திகுளத்தில் பேராசிரியர்’அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு மாபெரும் பொதுக்கூட்டம்.

Admin

திமுக ஆட்சிக்கு வந்த பின் தான் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது- வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மேயர் ஜெகனிடம் பொது மக்கள் கூறிய அந்த வார்த்தை……!

Admin

தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் முதலமைச்சருக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மக்கள் துணை நிற்க வேண்டும் – கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேசினார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!