Thupparithal
செய்திகள்

கள் இறக்கியதாக பனை தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு: போலீசார் மீது தமிழ்நாடு நாடார் பேரவை புகார்!

தூத்துக்குடியில் பனைத் தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு போடும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்டத் தலைவர் ரவி சேகர், நிர்வாகிகள் மற்றும் பனைத் தொழிலாளர்ளின் குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் “பனை ஏறி பதனீர் இறக்கி தொழில் செய்து வரும் நாடார் மக்களை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் கஷ்டப்படுத்தி அவர்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 10ஆம் தேதி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அன்பு மற்றும் சீனிவாசன் ஆகியோர் மீது ஊமத்தங்கொட்டை கலந்து கள் இறக்கியதாக பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாதம் 10 வழக்கு கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக இந்த வழக்குகளை போட்டுள்ளதாக போலீசார் கூறிகின்றனர். எனவே பனைத் தொழிலாளர்கள் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்து அவர்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு மக்களிடம் குறை கேட்பு!

Admin

விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகைத் திட்டம்; விண்ணப்பங்கள் வரவேற்பு!.

Admin

கோவில்பட்டி அருகே ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து அனுமதியின்றி நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் – போராட்டத்தில் ஈடுபட்ட வணிகர்களை போலீசார் கைது செய்தனர்.

Admin

Leave a Comment

error: Content is protected !!