Thupparithal
செய்திகள்

கோவில்பட்டி கூட்டுறவு நகர வங்கியில் முறைகேடு; மதிமுக கட்சியை சேர்ந்த தலைவர், துணைத் தலைவர் பதவி நீக்கம்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நகர வங்கியில் தலைவராக ஆர்.எஸ் ரமேஷ், துணைத் தலைவராக சரவணன் மற்றும் நிர்வாக இயக்குனராக 9 பேர் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிர்வாக குழுவில் குளறுபடிகள் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் தலைவர், துணைத் தலைவரை தற்காலிக பதவி நீக்கம் செய்ய கூட்டுறவு சங்கங்களில் இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும், குளறுபடிகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறதாக அதிகாரி தரப்பில் கூறப்படுகிறது.

கோவில்பட்டி நகர கூட்டுறவு வங்கியில் குளறுபடி தொடர்பாக தலைவர், துணைத் தலைவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆர்.எஸ் ரமேஷ் மதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் மு.மணிகண்டன்

Related posts

தூத்துக்குடி அருகே நட்டு 3 வாரம் ஆன நிலையில் மின்மாற்றி சாய்ந்தது. மின்வாரியத் துறையினர் சம்பவ இடத்திற்கு வராததால் அப்பகுதி மக்கள் வேதனை..!

Admin

வியாபாரிகள் சங்க 11வது ஆண்டு விழா; தொழில்கடன், கூட்டுறவு கடன் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் வழங்கினார்.

Admin

அவசர கோலத்தில் நடந்து முடிந்த குரூஸ் பர்னாந்து நினைவு மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா; அரசு விழா போல் இல்லாமல் சினிமா சூட்டிங் முடித்து விட்டு கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கிளம்பி சென்றதாக பொது மக்கள் குற்றச்சாட்டு!.

Admin

Leave a Comment

error: Content is protected !!