Thupparithal
செய்திகள்

அதிமுக 52 வது ஆண்டு துவக்க விழா; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர் சிலைக்கு மாலை அணிவித்தும், பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்..!

அதிமுக 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா, உள்ளிட்டோரின் திருஉருவ சிலைக்கு பேரணியாக சென்று கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் திரளானோர் கூடி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இந்நிகழ்வில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன்,நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

தூத்துக்குடி அருகே நிலத்தின் வழியாக செல்லும் மின்வயர், மின்கம்பம் மாற்ற ரூ5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய இளநிலை பொறியாளர் கைது

Admin

டாப் 10 படைப்புகள் பட்டியல் வெளியூட்டது யூ-டியூப் நிறுவனம்

Admin

கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட்டில் வாடகை பாக்கி கொடுக்காத சில கடைகளுக்கு சீல்; எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மார்க்கெட் முன்பு போராட்டம்!.

Admin

Leave a Comment

error: Content is protected !!