தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன், மனைவி மாலதி (47), மற்றும் அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வழக்கம்போல இன்று விவசாய பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருக்கும் போது பலத்த மழையினால் ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் மாலதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், அந்த கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம், தங்கமாரி, முருகலட்சுமி, ஈஸ்வரி, ஆகிய 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து மாலதியின் உடலைக் கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரோத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், விவசாய பணிக்காக சென்ற மாலதியின் மீது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.