Thupparithal
க்ரைம்

தூத்துக்குடி அருகே மின்னல் தாக்கி பெண் பரிதாப பலி; 4 பேர் காயம்!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன், மனைவி மாலதி (47), மற்றும் அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வழக்கம்போல இன்று விவசாய பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருக்கும் போது பலத்த மழையினால் ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் மாலதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், அந்த கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம், தங்கமாரி, முருகலட்சுமி, ஈஸ்வரி, ஆகிய 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து மாலதியின் உடலைக் கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரோத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், விவசாய பணிக்காக சென்ற மாலதியின் மீது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

கேரளாவில் இருந்து முறைகேடாக கடத்திவரப்பட்ட ரூபாய் 7.50 லட்சம் மதிப்புள்ள 8,500 லிட்டர் பர்னஸ் ஆயில் லாரியுடன் பறிமுதல்; குற்ற புலனாய்வுத்துறையினர் நடவடிக்கை

Admin

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் சுப்ரமணியபுரம் பத்திரகாளியம்மன் கோயில் மற்றும் சிஎஸ்ஐ தேவாலய தரப்பினர் இடையே சுற்றுச்சுவர் கட்டுவதில் பிரச்சினை போலீஸ் குவிப்பு!

Admin

தூத்துக்குடியில், பிறப்பு, இறப்பு சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ் போன்ற பல்வேறு சான்றிதழ்களை போலியாக தயாரித்து போலி ரப்பர் ஸ்டாம்ப் முத்திரைகளை இட்டு மோசடி செய்த 5 பேர் கைது; 80க்கும் மேற்பட்ட போலி ரப்பர் ஸ்டாம்ப் பறிமுதல்!.

Admin

Leave a Comment

error: Content is protected !!