Thupparithal
க்ரைம்

தூத்துக்குடியில் இருசக்கர வாகனங்களை திருடிய 4பேர் கைது; தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன் மற்றும் போலீசார் அதிரடி!.

தூத்துக்குடியில் இருவேறு இடங்களில் 2 இருசக்கர வாகனங்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்து, வாகனங்களை மீட்டனர். 

தூத்துக்குடி, காமராஜ் நகரைச் சேர்ந்த சுப்பையா மகன் கருப்பசாமி (29), என்பவர் தனது இருசக்கர வாகனத்தை கடந்த 08.10.2022 அன்று தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ளது.

அதேபோன்று கடந்த 19.10.2022 அன்று தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ளது. 

இதுகுறித்து வாகனங்களின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி சத்யா நகரை சேர்ந்த ரமேஷ் மகன் ரெட்டை வினோத் (எ) வினோத் (25), 3 சென்ட் அந்தோனியார்புரம் பகுதியைச் சேர்ந்த மதியழகன் மகன் ஐகோர்ட் மகாராஜா (20), அண்ணாநகரை சேர்ந்த லிங்கராஜ் மகன் பொன்ராஜ் (எ) ராசு (23) மற்றும் கருணாநிதி நகரைச் சேர்ந்த சுதாகர் மகன் கார்த்திக் (எ) கலப் (22) ஆகிய 4 பேரும் மேற்படி 2 இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து, தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்  கங்கைநாத பாண்டியன் மற்றும் போலீசார் 4பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் 1,50,000 மதிப்புள்ள 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட ரெட்டை வினோத் (எ) வினோத் மீது ஏற்கனவே தெற்கு காவல் நிலையத்தில் கொலை முயற்சி, வழிப்பறி உட்பட 10 வழக்குகளும், பொன்ராஜ் (எ) ராசு மீது கொலை மிரட்டல் உட்பட 2 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கியில் ரூ.25கோடி மோசடி வழக்கு: பெண் துணைச் செயலா் கைது.

Admin

தூத்துக்குடியில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்திற்கு தீவைப்பு!

Admin

தூத்துக்குடியில் வழக்கறிஞர் ஓட ஓட வெட்டிக் கொலை: பயங்கரம்!

Admin

Leave a Comment

error: Content is protected !!