Thupparithal
செய்திகள்

மத்திய அரசு பணிக்கான எஸ்.எஸ்.சி – எம்.டி.எஸ் வகுப்புகள் தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் துவக்கம்!.

தூத்துக்குடி, கின்ஸ் அகாடமியில் மத்திய அரசின் எஸ்.எஸ்.சி, எம்.டி.எஸ் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் (09.02.2023) நேற்று பிற்பகல் துவங்கியது.

துவக்க விழாவிற்கு, பள்ளி கல்வி துறையில் பணிபுரியும் ரா.சிவகுருநாதன் தலைமை வகித்தார். கின்ஸ் அகாடமியின் நிறுவனர் எஸ். பேச்சிமுத்து வரவேற்றார். சிறப்பு விருந்தினராக எஸ்.எஸ்.சி பயிற்றுனர் விக்னேஷ்வரி கலந்து கொண்டார்.

அப்போது, நிறுவனர் பேச்சு முத்து பேசுகையில், பிரதமரின் பத்து லட்சம் புதிய வேலை வாய்ப்பை தொடர்ந்து கின்ஸ் அகடமியில் இலவச எஸ்.எஸ்.சி – எம்.டி.எஸ் வகுப்புகள் துவக்கியிருக்கிறோம். பல்வேறு கிராம பகுதி மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றார்.

எஸ்.எஸ்.சி பயிற்றுனர் விக்னேஷ்வரி பேசுகையில், மத்திய அரசு முதன்முதலாக எஸ்.எஸ்.சி தேர்வை தமிழில் நடத்துகிறது. இதனால் தமிழக கிராமப்புற மாணவர்கள் அதிக அளவு தேர்வு எழுதுவது மட்டுமின்றி பெருமளவில் வெற்றியும் பெறுவார்கள். தமிழ் வழியில் படித்த மாணவர்கள் தற்போது அதிக அளவு மத்திய அரசு பணியில் வெற்றி பெற்று பணியிடம் பெற்று வருகின்றனர். மிக குறைந்த நாட்களில் தேர்வில் வெற்றிபெறும் வழிமுறை குறித்தும் அதற்கான பாடதிட்டம் குறித்தும் நாங்கள் உங்களுக்கு பல்வேறு குறிப்புகள் தருவோம். ஆகவே கடினமாக உழைக்கும் பட்சத்தில் நீங்கள் இந்த தேர்வில் வெற்றி பெற இப்போது இருக்கும் இந்த 60 நாட்களே போதுமானதாகும் என கூறினார்.

இவ்விழாவில், கின்ஸ் அகாடமி பயிற்றுனர்கள் ரேவதி, ஜோதிமணி, வினோத் மற்றும் இலக்கியா ஆகியோர் கலந்து கொண்டனர். நீதித்துறையில் பணியிடம் பெற்றுள்ள கின்ஸ் அகடமி மாணவி செல்வி கே. வித்யா நன்றி கூறினார்.

செய்தியாளர் மு.மணிகண்டன்

Related posts

தூத்துக்குடி அருகே, கோயில் சுற்றுச்சுவர் எழுப்ப இடையூறு, சட்ட போராட்டம் செய்து வெற்றி பெற்ற பின்னரும், எதிர் தரப்பினரிடம் இருந்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் மாவட்ட நிர்வாகத்திடம் கோவில் நிர்வாகிகள் வேண்டுகோள்!.

Admin

திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசு; மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!

Admin

தூத்துக்குடி, ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி வளாகத்தில் புதிதாக மூன்று வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா; ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் பள்ளி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!