Thupparithal
க்ரைம்

தூத்துக்குடியில் உள்ள காமராஜர் மார்க்கெட்டில் இயக்குனர் பதவியில் இருந்து தன்னை மோசடியாக மார்க்கெட் தலைவர் நீக்கிவிட்டதாக கூறி இயக்குனர் அமிர்தராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

தூத்துக்குடி மாநகராட்சி அருகே காமராஜர் காய்கறி சந்தை அமைந்துள்ளது. இதன் தலைவராக சீனா தானா சுந்தரபாண்டியன் செயல்பட்டு வருகிறார். இதில் இயக்குனராக செபத்தையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தராஜ் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், மார்க்கெட் பதவியில் இருந்து மகாசபை கூட்டத்தைக் கூட்டி முடிவு எடுக்காமல் அமிர்தராஜ் விளகிக் கொள்வதாக மோசடியாக அமிர்தராஜின் கையெழுத்தை போலியாக போட்டு தற்போது மார்க்கெட் தலைவராக இருக்கும் சீனா தானா சுந்தரபாண்டியன் அமிர்திராஜை மோசடியாக நீக்கம் செய்துள்ளார்.

இந்த மோசடி இயக்குனர் அமிர்தராஜிற்கு தெரியவந்ததை தொடர்ந்து மார்க்கெட் இயக்குனர் பதவியில் இருந்து போலி ஆவணங்கள் தயாரித்து தனது கையெழுத்தை மோசடியாக போட்டு இயக்குனர் பதவியில் இருந்து நீக்கிய மார்க்கெட் தலைவர் சீனா தானா சுந்தரபாண்டியன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

சுமார் 100 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள இந்த மார்க்கெட் நிர்வாகத்தில் இருந்து தங்களை நீக்கிவிட்டு மார்க்கெட்டை அபகரிக்க சீனா தானா சுந்தரபாண்டியன் ஈடுபடுவதாகவும் அமிர்தராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

Related posts

போக்சோ வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தீர்ப்பு..!

Admin

தூத்துக்குடியில், பிறப்பு, இறப்பு சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ் போன்ற பல்வேறு சான்றிதழ்களை போலியாக தயாரித்து போலி ரப்பர் ஸ்டாம்ப் முத்திரைகளை இட்டு மோசடி செய்த 5 பேர் கைது; 80க்கும் மேற்பட்ட போலி ரப்பர் ஸ்டாம்ப் பறிமுதல்!.

Admin

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து தங்க நகை திருட்டு; உடனடியாக திருடனை கண்டுபிடித்த போலிசார்!.

Admin

Leave a Comment

error: Content is protected !!