Thupparithal
செய்திகள்

கோவில்பட்டி, ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவிலில் கொடிமரம் நடும் விழா; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம்!.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதிநகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவிலில் கொடி மரம் நடும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில், இன்று காலை 6:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம், யாகசாலை பூஜை, மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு தீபாரதணை, நடைபெற்றது..

இவ்விழாவில், நகர மன்ற உறுப்பினர் கவியரசன் தலைமையில், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கொடி மரம் நடுதல் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

இதில், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, ராமமூர்த்தி, கோபி, விழா பூஜைகளை பூசாரி செல்வமாடத்தி, விஜயா, செய்திருந்தனர்.

இதில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related posts

கி.ராஜநாராயணன் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் முழு திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கம்-முதல்வர் முக. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Admin

தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் சங்க தலைவராக எஸ்டிஎஸ் ஞானராஜ் பொறுப்பேற்றார்.

Admin

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சியின் 152வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் வ.உ.சி திருவுருவ சிலைக்கு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Admin

Leave a Comment

error: Content is protected !!