தூத்துக்குடியில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு.., பொதுமக்கள் கவலை.!

தூத்துக்குடியில் தேங்காய் விலை கடும் உயர்வால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்..
தூத்துக்குடி காய்கறி சந்தைக்கு கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இருந்து தேங்காய் விற்பனைக்கு வருவது வழக்கம். கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளதால் தற்பொழுது காய்கறி சந்தைக்கு தேங்காய் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் கடந்த மாதம் கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் தற்பொழுது 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த தேங்காய் விலை உயர்வால் பொதுமக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்..மேலும், விரைவில் பொங்கல் பண்டிகை வர உள்ளதால் மேலும் தேங்காய் விலை கடுமையாக ஏகிரும் எனவும் கூறுகின்றனர் தேங்காய் வணிகர்கள்...
What's Your Reaction?






